சாதி-மத அடிப்படையில் பிளவுபட்டால்.. இந்தியா பலவீனம் ஆகிடும்.. ஒற்றுமைக்கு குரல்கொடுத்த உபி முதல்வர்
போபால்: உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் பலம் ஒற்றுமை என்றும், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டால் நாடு பலவீனம் அடையும் என்றும் பேசியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கக்கோரி சம்பவம் நடைபெற்றது. ஆங்கிலேய ஆட்சியின் போது ரயிலை நிறுத்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அதில் இருந்த பணத்தை கைப்பற்றி சென்றனர்.
சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதங்கள் வாங்க பணத்தை எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தின் நினைவு நாளை முன்னிட்டும், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டியும், இன்று லக்னோவில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலக நாடுகளுக்கு வழிகாட்டி
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் பலமே ஒற்றுமைதான். இந்தியாவின் 135 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பேசும் போது, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டும் இந்தியா இருக்காது, ஜனநாயகத்தின் தாயாக உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகவும், பிரதிநிதியாகவும் மாறும். நாம் சாதி, மதம், இனம், மொழியாக பிளவு பட்டால் அது நமது பலத்தை பிரித்து பலவீனப்படுத்தும். வளர்ச்சியை தடுக்கும். இந்தியா தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

பலவீனப்பட்டுவிடக்கூடாது
வளர்ச்சிக்கு பாதிக்கப்பட்டு, சீர்குலைவு மற்றும் அராஜக நிலையை ஏற்படுத்தி நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எந்த வழியிலும் நாடு மீண்டும் பலவீனப்பட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே நமது தீர்க்கமான முடிவாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் ''இந்தியாவின் பலமே ஒற்றுமைதான் எனவும், நாட்டு மக்கள் சாதி, மத அடிப்படையில் பிளவு பட்டால் இந்தியா பலவீனம் ஆகிவிடும்'' என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

கக்கோரி இரயில் கொள்ளை
கக்கோரி இரயில் கொள்ளை சம்பவம் என்பது இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, இந்துஷ்தான் சோசியலிச குடியரசு என்ற அமைப்பினரால் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக பெரிய அளவில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவமாகும். இது தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவுக்கு அருகில் உள்ள கக்கோரி என்னுமிடத்தில் நிகழ்ந்ததால் இதற்கு அந்த பெயர் வந்தது. கடந்த 1925ம் ஆண்டு இதே நாள் நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு லட்சம் கொள்ளை
அன்றைய வடக்கு மாகாணமான சகரன்புரிலிருந்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நோக்கி வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களின் ரயிலில் பணம் கொண்டுவரப்படுவதாகவும் அதனை கொள்ளையடிப்பதற்காகவும் இந்திய சுதந்திர போராட்ட அமைப்பினர் திட்டமிட்டனர். அதன்படி ரயில் கக்கோரி என்னும் இடத்தில் வந்த போது ரயிலை நிறுத்தி அங்கிருந்த காவலர்களை அடித்து தாக்கியதோடு அந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். அந்த காலக்கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கிழக்கிந்திய பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications