கர்நாடகாவில் பிளஸ் டூ கெமிஸ்ட்ரி வினாத்தாள் மீண்டும் லீக்: மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வில் வேதியியல் வினாத் தாள் மீண்டும் கசிந்ததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Class 12 Chemistry paper leaked again in Karnataka, 1.4 lakh students affected

கர்நாடக மாநிலத்தில் பி.யூ. எனப்படும் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த 11ம் தேதி துவங்கியது. 6.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதி வருகிறார்கள். கடந்த 21ம் தேதி மாணவ, மாணவியர் வேதியியல் தேர்வு எழுதினார்கள்.

Class 12 Chemistry paper leaked again in Karnataka, 1.4 lakh students affected

தேர்வு முடிந்த பிறகு வேதியியல் வினாத் தாள் கசிந்தது தெரிய வந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மார்ச் 31ம் தேதி மறுதேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளதால் இன்றைய தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதால் 1.4 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு ஒத்தி வைக்கப்படுவதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Class 12 Chemistry paper leaked again in Karnataka, 1.4 lakh students affected

கர்நாடக மாநில கல்வித் துறை அமைச்சர் ரத்னாகரை பணிநீக்கம் செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விசாரணையில் பல்லாரியில் உள்ள பெண்கள் கல்லூரியில் தான் வினாத்தாள் கசிந்துள்ளது தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+