க்ளீன் இந்தியா... கிரீன் இந்தியா: கையில் துடைப்பதுடன் மோடி படம் போட்ட காலண்டர்!
டெல்லி : தூய்மை இந்தியா திட்டத்தை மையமாகக் கொண்டு கையில் துடைப்பத்துடன் மோடி படம் போட்ட புதிய காலண்டர் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. இத்திட்டத்தின் மூலம் வரும் இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வரும் புத்தாண்டிற்கான காலண்டரையும் ‘தூய்மை இந்தியா, பசுமை இந்தியா' என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு மத்திய அரசு தயாரித்துள்ளது.
இந்த காலண்டரின் ஜனவரி மாதப் பக்கத்தில் ஜனவரி மாதப் பக்கத்தில் பிரதமர் மோடி கையில் துடைப்பத்துடன் சாலையோரத்தை தூய்மை செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் மத்திய அரசின் காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.