ஆந்திராவில் கனமழை,,, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் பெய்துவரும் கனமழை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலன மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

CM Chandrababu Naidu issues safety instructions as heavy rain

இதனால், ஆந்திரா மாநிலத்தின் நெல்லூர், குண்டூர், ஆகிய இடங்களில் நேற்றிரவு மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், விசாகப்பட்டினம் , கிழக்கு கோதாவரி உள்ளிட்ட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

CM Chandrababu Naidu issues safety instructions as heavy rain

இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தேவையான இடங்களில் தேசிய பேரிடர் படை, தீயணைப்பு படைகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். சாலைகளில் விழுந்துள்ள மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+