ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியர்... அடித்து துவைத்த மாணவிகள்
Recommended Video

பாட்டியாலா: பஞ்சாப்பில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கல்லூரி மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் கடந்த 10 ஆண்டுகளில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச எஸ்எம்எஸ்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் டபுள் மீனிங் மற்றும் ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளார்.

அடித்து துவைத்த மாணவிகள்
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கல்லூரி வளாகத்தில் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பொறுமையை இழந்த மாணவிகள், பேராசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.

தரதரவென இழுத்து சென்று
பின்னர் அந்த பேராசிரியரை தரதரவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு இழுத்து சென்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பரபரப்பு சம்பவம்
ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கல்லூரி மாணவிகள் தர்மடி கொடுத்து கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications