அமித் மிஸ்ரா மீதான புகாரை வாபஸ் பெற தோழி தயார்.... நிபந்தனையுடன்!
பெங்களூர்: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீதான வழக்கை வாபஸ் பெற அவரது தோழி தயாராக உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தான் தங்கியிருந்த 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த தனது தோழியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் பெங்களூர் போலீசில் அமித் மீது புகார் அளித்தார். அமித் என் முகத்தில் டீ கெண்டியை வீசினார், அடித்தார், கை விரலை ஒடித்தார் என அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் அமித் மீது வழக்குப்பதிவு செய்து அவர் நேரில் ஆஜராகி இந்த சம்பவம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமித் மீதான வழக்கை வாபஸ் பெற அவரது தோழி தயாராக உள்ளார்.
அமித் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னை தாக்கியது குறித்து விளக்கம் அளித்தால் அவர் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications