குளிர்பான விற்பனையை கண்காணிக்க வேண்டும்... சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Conduct periodic checks of soft drinks: Supreme Court
டெல்லி: கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை, அவ்வப்போது கண்காணிக்குமாறு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குளிர்பானங்களில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாகவும், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி, கடந்த 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.

குளிர்பானங்களில் உள்ள வேதிப் பொருட்கள் குறித்து, அதன் மேலட்டையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தி இருந்தார்.

மேலும், குழந்தைகளை தவறாக வழிநடத்தும் வகையிலான விளம்பரங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் உணவுப் பொருட்களின் தர‌ம் குறித்து கண்காணிக்கும் சட்டங்கள் போதுமானதாக உள்ளதாகவும், அச்சட்டத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும், பிரபல குளிர்பான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், குளிர்பானங்களால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். இந்த பிரச்னை அரசியல் சாசனத்தில் குடிமக்கள் உயிர் வாழ்வதற்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+