4 வாரத்தில் மறுதேர்வு சாத்தியமில்லை.. சிபிஎஸ்இ மனு.. நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி: மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்தினைத் தொடர்ந்து மறுதேர்வு நடத்த கூடுதல் கால அவகாசம் வழங்க அனுமதி கோரிய மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்று நாளை விசாரணை நடத்தவுள்ளது.
மத்திய பள்ளி கல்வி வாரியம் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வை கடந்த மாதம் 3 ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

கடந்த 5 ஆம் தேதி இதன் முடிவு வெளியாக இருந்தது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் தேர்வு தொடங்கும் முன்பாகவே 44 மாணவர்கள் கேள்வித் தாள்களை முறைகேடாக பெற்று தேர்வை எழுதியதாக சில மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஹரியானா போலீசார் விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர்.
நுழைவுத் தேர்வில் ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் முறைகேடு மூலம் சட்டவிரோதமாக பலன் அடைந்து இருப்பார்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலியான முகவரி மூலம் 72 செல்போன் இணைப்புகளை பெற்று, 102 கேள்விகளுக்கான பதில்கள் அந்த மாணவ,மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே முறைகேடு நடைபெற்றதால் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து அகில இந்திய அளவில் 6.5 லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வை நேற்று அதிரடியாக ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் மறுதேர்வு தேர்வு நடத்த கூடுதல் காலஅவகாசம் வழங்ககோரி மத்திய பள்ளி கல்வி வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் சிபிஎஸ்இயின் மனுவானது நாளை விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications