4 வாரத்தில் மறுதேர்வு சாத்தியமில்லை.. சிபிஎஸ்இ மனு.. நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி: மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்தினைத் தொடர்ந்து மறுதேர்வு நடத்த கூடுதல் கால அவகாசம் வழங்க அனுமதி கோரிய மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்று நாளை விசாரணை நடத்தவுள்ளது.
மத்திய பள்ளி கல்வி வாரியம் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வை கடந்த மாதம் 3 ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

கடந்த 5 ஆம் தேதி இதன் முடிவு வெளியாக இருந்தது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் தேர்வு தொடங்கும் முன்பாகவே 44 மாணவர்கள் கேள்வித் தாள்களை முறைகேடாக பெற்று தேர்வை எழுதியதாக சில மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஹரியானா போலீசார் விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர்.
நுழைவுத் தேர்வில் ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் முறைகேடு மூலம் சட்டவிரோதமாக பலன் அடைந்து இருப்பார்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலியான முகவரி மூலம் 72 செல்போன் இணைப்புகளை பெற்று, 102 கேள்விகளுக்கான பதில்கள் அந்த மாணவ,மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே முறைகேடு நடைபெற்றதால் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து அகில இந்திய அளவில் 6.5 லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வை நேற்று அதிரடியாக ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் மறுதேர்வு தேர்வு நடத்த கூடுதல் காலஅவகாசம் வழங்ககோரி மத்திய பள்ளி கல்வி வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் சிபிஎஸ்இயின் மனுவானது நாளை விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications