சித்துவின் 'சித்து விளையாட்டு'- கடும் கோபத்தில் காங். மேலிடம்.. பாயக் காத்திருக்கும் நடவடிக்கை!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத்சிங் சித்து மீது காங்கிரஸ் மேலிடம் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை பாயக் கூடும் என்கின்றன காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள்.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முதலில் துணை முதல்வர் பதவிக்காக மல்லுக்கட்டினார் சித்து.
ஆனால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரவே முடியாது என்பதில் மாஜி முதல்வர் அமரீந்தர்சிங் உறுதியாக இருந்தார். அதனால் வேறுவழியே இல்லாமல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கப்பட்டார் சித்து.

சித்துவின் சித்து விளையாட்டு
அத்துடன் நிற்காமல் முதல்வர் பதவிக்கு குறிவைத்தார் சித்து. இதற்காக அமரீந்தர்சிங்குக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து. அப்போதும் கூட காங். மேலிடம் அமரீந்தர்சிங்க்குக்கு ஆதரவாக இருந்தது. ஒரு கட்டத்தில் அமரீந்தர்சிங்குக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து.

அமரீந்தர்சிங் ராஜினாமா
இதனால் வேறுவழியே இல்லாமல் அமரீந்தர்சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமக்குதான் முதல்வர் பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் சித்து. ஆனால் பதவி விலகிய அமரீந்தர்சிங், சித்துவை முதல்வராக்க மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாகிஸ்தானுடன் உறவு வைத்திருக்கும் தேசவிரோதி சித்து என விமர்சித்தார் அமரீந்தர்சிங்.

சித்துவுக்கு ஏமாற்றம்
இதையடுத்து சித்துவுக்கு மிக நெருக்கமான சரண்ஜித்சிங் சன்னியை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியது. இதில் சித்து அதிருப்தி அடைந்தார். அத்துடன் அமைச்சர்கள், அமைச்சர்களின் இலாகாக்கள் ஆகியவை தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவரான சித்துவுடன் ஆலோசனை நடத்தாமல் டெல்லி மேலிடமே அனைத்தையும் தீர்மானித்தது. இதில் ரொம்பவே கடுப்பாகிப் போன சித்து, சமரசம் செய்து கொள்ள முடியாது என மொட்டையாக ஒரு ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
Recommended Video

சித்து மீது கடும் அதிருப்தி
அப்போது கூட, சித்துவிடம் ரொம்ப அவசரப்படாதீங்க.. வெயிட் பண்ணுங்க என்றுதான் சாப்ட் முகத்தை காட்டியிருக்கிறது டெல்லி. ஆனால் சித்துவோ தமது ராஜினாமா கடிதத்தை ஊடகங்களுக்கு கொடுத்தார். இதில் செம கடுப்பாகிவிட்டதாம் டெல்லி மேலிடம். சித்து என்கிற ஒற்றை மனிதரால் வெல்லும் வாய்ப்புள்ள பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அழிந்து போகும் நிலைதான் உருவாகிறது என்பதை லேட்டாகவே டெல்லி மேலிடம் புரிந்து கொண்டதாம். இதனால் சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டெல்லி தயாராகி வருகிறதாம்.
-
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications