ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடகாவை நெருக்குகிறார் சாமி: காங். சட்டப்பிரிவு காட்டம்!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்ய சுப்பிரமணியன் சுவாமி தேவையில்லாமல் கர்நாடகாவுக்கு நெருக்கடி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி.எம்.தனஞ்சய் தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வழக்கை கர்நாடகா நடத்தியது. மற்றபடி, வழக்கிற்கும் கர்நாடக அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
தற்போது ஹைகோர்ட் ஜெயலலிதாவை நிரபராதி என்று விடுதலை செய்துவிட்டது. இனிமேல் கர்நாடகாவுக்கும், ஜெயலலிதா வழக்குக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் திமுகவின் அன்பழகன் ஆகியோர்தான் பார்ட்டிகள். கர்நாடகா வழக்கில் ஒரு பார்ட்டியே கிடையாது.
நிலைமை இப்படி இருக்க, மேல்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு அதிகாரம் இல்லை என்பதே எங்கள் கருத்து. இதை கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளோம். இறுதியாக அரசு என்ன முடிவு எடுத்தாலும் சம்மதமே. மேலும், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், நான் செய்வேன் என்பது போன்ற செய்திகளை, சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் கர்நாடக அரசுக்கு சு.சுவாமி நெருக்கடி தருகிறார்.
தேவைப்பட்டால், சு.சுவாமி அல்லது அன்பழகன் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துகொள்ளட்டும். இவ்வாறு தனஞ்சய் தெரிவித்தார். மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் இவ்வாறு பேட்டியளித்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications