ஆதரவை ஏற்காமல் கெஜ்ரிவால் பொறுப்பை தட்டி கழிக்கிறார்: காங்கிரஸ்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தும் தமது பொறுப்பை அர்விந்த் கெஜ்ரிவால் தட்டி கழிக்கிறார் என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆதரவை ஏற்ற வேண்டுமெனில் தங்களது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று கூறி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு ஆம் ஆத்மி கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை காங் தலைவர் ஹரூன் யூசுப் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆம் ஆத்மி ஏற்க வேண்டும். கெஜ்ரிவால் பொறுப்பை தட்டி கழிக்கிறார்;
நிபந்தனையற்ற ஆதரவையே காங்கிரஸ் வழங்குகிறது.அதனால் கெஜ்ரிவால் நிபந்தனைகள் விதிக்க தேவையில்லை. மின்துறையில் சிறப்பு தணிக்கை குழு அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆம் ஆத்மி ஜனநாயகத்தை அவமதிக்கிறது. என்றார்.












Click it and Unblock the Notifications