சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் மம்தா.. மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சி பற்றி காங். தாக்கு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சியால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மம்தாவை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரசை பலவீனப்படுத்துவதற்காக பாஜகவை வலுப்படுத்தியவர்கள், இன்று தனது சொந்த கட்சியின் தலைவர்களை பாதுகாக்கவே போராடுகிறார்கள் என கூறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 18 இடங்களை கைப்பற்றி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் தான் வென்றுள்ளது இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் மிக மோசமாக தோற்றுள்ளனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானார்ஜி பாஜகவின் இந்த எழுச்சியால் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

இப்படியே போனால் இன்னும் இரண்டு வருடத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்துவிடுமே என்ற அச்சத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார். இதனால் தேர்தல் வியூக கில்லாடியான பிரசாந்த் கிஷோரை தனக்காக வேலை செய்ய அழைத்துள்ளார். அவரும் மம்தாவுக்காக அடுத்த மாதம் முதல் வேலை செய்யப்போகிறார்.
இதற்கிடையில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சியால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் போல் காங்கிரஸ் கட்சியும் கடும் அதிர்ச்சியில் உள்ளது. பாஜகவின் எழுச்சிக்கு மம்தாவின் தவறான செயல்களே காரணம் என குற்றம்சாட்டி உள்ளது காங்கிரஸ் கட்சி.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், "மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் எழுச்சிக்கு மம்தா பானர்ஜி மட்டுமே காரணம். அவர் அப்பட்டமான சிறுபான்மை பிரசாரத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், பாஜக மேற்கு வங்காளத்தில் காலூன்றி இருக்காது.
எதிர்க்கட்சிகளை அகற்றுதல் மற்றும் அந்த கட்சிகளின் தலைவர்களை வேட்டையாடுதல் என்ற மம்தாவின் கொள்கைகளால்தான் பாஜக எழுச்சி பெற்றுள்ளது இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டுவதற்கு மம்தாவுக்கு அதிகாரம் இல்லை. ஒரு காலத்தில் காங்கிரசை பலவீனப்படுத்துவதற்காக பாஜகவை வலுப்படுத்தியவர்கள், இன்று தனது சொந்த கட்சியின் தலைவர்களை பாதுகாக்கவே போராடுகிறார்கள்" இவ்வாறு சோமன் மித்ரா மம்தாவை கடுமையாக விமர்சித்தார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications