சத்தீஸ்கரில் ஆட்சி அமைப்பது யார்? இழுபறி நீடிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டன.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சம இடங்களில் முன்னிலை வகித்து வந்தன.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி 49 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களிலும் முன்னிலை வகித்தன. இதனால் சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் நிலை உருவானது.
மாலை 5.30 மணி நிலவரப்படி 54 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. அதே நேரத்தில் பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன.
இதனால் இம்மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது இழுபறி நிலைமையில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications