அஸ்ஸாமில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
டெல்லி: அஸ்ஸாமில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் அங்கு தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கருத்துகணிப்பு நடத்தியது. மார்ச் மாதம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. கருத்துக்கணிப்பின் முடிவுகல் நேற்று இரவு வெளியிடப்பட்டன.
126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டசபைக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 55 தொகுதிகளில் வெற்றி பெறும். இது மெஜாரிட்டியை விட 9 தொகுதிகள் குறைவு.
ஆளும் காங்கிரஸ் 53 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 12 இடங்களிலும் பிற கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகிறது.
மேலும், மொத்த வாக்குகளில் காங்கிரஸ் கட்சிக்கு 36.9 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 35.3 சதவீத ஓட்டுகளும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிக்கு 12.1 சதவீத வாக்குகளும் பிற கட்சிகளுக்கு 15.8 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
CVoter #OpinionPoll2016 projection: BJP’s CM candidate predicts clear majority for party, says Congress will get 30 seats or less
— TIMES NOW (@TimesNow) April 1, 2016