லட்சத்தீவின் அமைதியை சீர்குலைக்கிறார் பிரஃபுல் படேல்... மகிளா காங்கிரஸ் நிர்வாகி குற்றச்சாட்டு..!
லட்சத்தீவு: யூனியன் டெரிடரி பிரதேசமான லட்சத்தீவின் அமைதியை அங்கு நிர்வாக அதிகாரியாக இருக்கும் பிரஃபுல் கோடா படேல் சீர்குலைத்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத்.
லட்சத்தீவு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக உள்ள இவர் மாதத்தில் ஒரு வாரமாவது அங்கு கட்சிப் பணிகளை செய்யக்கூடியவர். இந்நிலையில் லட்சத்தீவுக்கு வந்த சோதனை குறித்து ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்ட விவரம் பின்வருமாறு;

"இயற்கை எழில் கொஞ்சும் அமைதிப்பூங்காவாக திகழக்கூடிய லட்சத்தீவுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கக்கூடிய மக்களில் பெரும்பான்மையானோர் பழங்குடியின இஸ்லாமியர்கள். அவர்கள் யார் வம்புக்கும் போகாமல் இறைவனை உயிருக்கு உயிராக நேசித்து வணக்க வழிபாடுகளை செய்யக்கூடியவர்கள். இந்திதாவிலேயே கிரைம் ரேட் பூஜ்யம் உள்ள பகுதி என்றால் அது லட்சத்தீவு தான். அங்கு இதுவரை ஒரு திருட்டு சம்பவமோ, கொலையோ- கொள்ளையோ நடந்ததில்லை. அந்தளவுக்கு அமைதியே உருவாக திகழும் பகுதி."
"மேலும் அங்கு மதுவின் வாசத்தை கூட உங்களால் நுகர முடியாது. அந்தளவு அங்கு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அங்கு நிர்வாக அதிகாரியாக வந்திருக்கும் குஜராத் முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேல் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தென்னை மரத்துக்கு கூட காவிச்சாயம் பூசுவதுடன் மக்கள் விரோத சட்டங்களை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மீன் சாப்பிடக்கூடாது, பீப் சாப்பிடக் கூடாது என ஆர்டர் போட இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது. பாவம் லட்சத்தீவு மக்கள், அங்கிருந்து என்னை தொடர்பு கொள்பவர்கள் தங்கள் வேதனைகளை கண்ணீர் மல்க கூறுகின்றனர்."

"இதை எங்கள் காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. விரைவில் இந்த விவகாரத்திற்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடிப்போம். பிரஃபுல் கோடா படேல் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இவரது பிரித்தாளும் சூழ்ச்சி லட்சத்தீவில் நிச்சயம் அரங்கேறாது. லட்சத்தீவு குறித்த செய்திகளில் ஊடகங்கள் கவனம் செலுத்தாதது உள்ளபடியே எனக்கு வருத்தமளிக்கிறது. அங்கு வாழும் மக்கள் மிகவும் அமைதியானவர்கள். இன்னும் சொல்லப்போனால் பழையகால வாழ்க்கை முறையையே பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். பாஜக இது போன்ற செயல்களை கைவிட்டு கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்."
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications