நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல - சசி தரூர்
ஜெய்ப்பூர்: நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் இறுதி நாளில் பேசிய சசி தரூர், இந்தியாவிற்கு பொறுத்தமற்ற நாடாளுமன்ற அமைப்பு முறையை நாம் தொடர்ந்து பின்பற்றி வருவதற்கு காரணம், இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர்களை பின்பற்றுவது தான்.

1930-ல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் இந்தியாவிற்கு ஏற்றது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜனாதிபதி ஆட்சி முறைதானே தவிர நாடாளுமன்ற ஆட்சி முறை இல்லை என்று கூறியது. ஆனால் இந்த கருத்திற்கு தேசிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
நாம் இப்போது பின்பற்றும் நாடாளுமன்ற ஆட்சி முறையானது, ஒரு சிறிய தீவு நாட்டால் அளிக்கப்பட்டது. வெறும் 60 மில்லியன் மக்களை கொண்ட இங்கிலாந்தில் ஒவ்வொரு எம்.பி.-யும் வெறும் ஒரு லட்சம் மக்களின் பிரதிநிதிகளாகத் தான் உள்ளனர்.
ஆனால், இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், கலாச்சரம், மொழி, நிற, சாதி, நம்பிக்கை, உணவு, தண்டனை, ஆடை என பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் கூட்டணி அரசாங்கம் செயல்படுவது கடும் சவால் நிறைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு எம்.பி.-யும் சுமார் 20 லட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளனர்.
எனவே தொகுதியில் உள்ள ஒவ்வொரு மக்களையும் சந்திப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், பல்வேறு பிரிவுகளையும் கொண்ட நாட்டுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறை உகந்ததாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications