நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல - சசி தரூர்
ஜெய்ப்பூர்: நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் இறுதி நாளில் பேசிய சசி தரூர், இந்தியாவிற்கு பொறுத்தமற்ற நாடாளுமன்ற அமைப்பு முறையை நாம் தொடர்ந்து பின்பற்றி வருவதற்கு காரணம், இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர்களை பின்பற்றுவது தான்.

1930-ல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் இந்தியாவிற்கு ஏற்றது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜனாதிபதி ஆட்சி முறைதானே தவிர நாடாளுமன்ற ஆட்சி முறை இல்லை என்று கூறியது. ஆனால் இந்த கருத்திற்கு தேசிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
நாம் இப்போது பின்பற்றும் நாடாளுமன்ற ஆட்சி முறையானது, ஒரு சிறிய தீவு நாட்டால் அளிக்கப்பட்டது. வெறும் 60 மில்லியன் மக்களை கொண்ட இங்கிலாந்தில் ஒவ்வொரு எம்.பி.-யும் வெறும் ஒரு லட்சம் மக்களின் பிரதிநிதிகளாகத் தான் உள்ளனர்.
ஆனால், இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், கலாச்சரம், மொழி, நிற, சாதி, நம்பிக்கை, உணவு, தண்டனை, ஆடை என பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் கூட்டணி அரசாங்கம் செயல்படுவது கடும் சவால் நிறைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு எம்.பி.-யும் சுமார் 20 லட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளனர்.
எனவே தொகுதியில் உள்ள ஒவ்வொரு மக்களையும் சந்திப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், பல்வேறு பிரிவுகளையும் கொண்ட நாட்டுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறை உகந்ததாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications