எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக காங். எம்.பி.க்கள் தர்ணா
டெல்லி: எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று, வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை சட்டம் வலுவிழந்துவிட்டதாக தாழ்த்தப்பட்டோர் ஆர்வலர்களும், அவ்வமைப்பினரும் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று, வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications