ஈஸியாலாம் வெல்ல முடியாது.. நடிகை கங்கனா ரனாவத்தை வீழ்த்த காங்கிரஸ் பிரமாஸ்திரம்.. வேட்பாளர பாருங்க
சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பெரிய பிளான் போட்டுள்ளது. மேலும் கங்கனா ரனாவத்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இவர் போட்டியிடும் பட்சத்தில் கங்கனா ரனாவத் வெற்றி பெறுவது எளிதாக இருக்காது.
இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் தாம்தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி லோக்சபா தொகுதியில் கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மண்டி என்பது கங்கனா ரனாவத்தின் சொந்த தொகுதியாகும். இந்நிலையில் தான் தற்போது கங்கனா ரனாவத் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்த தொகுதிக்கு கடைசி கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை மண்டி தொகுதியில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி புதிய திட்டத்தை திட்டி உள்ளது. அதாவது கங்கனா ரனாவத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், சிம்லா புறநகர் தொகுதி எம்எல்ஏவான விக்ரமாதித்ய சிங்கை களமிறக்க வியூகம் வகுத்துள்ளது.
இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரபத்ரசிங்கின் மகன். இவரது தாய் பெயர் பிரதீபா சிங். இவர் தான் தற்போது மண்டி தொகுதி எம்பியாகவும், இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். பிரதீபா சிங் இந்த தொகுதியில் 2004, 2013 இடைத்தேர்தல் மற்றும் 2021 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. இதனால் வரும் தேர்தலில் தனக்கு பதில் மகன் விக்ரமாதித்ய சிங்கை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதீபா சிங் கூறுகையில், ‛‛ வரும் லோக்சபா தேர்தலில் மண்டி தொகுதியில் எனது மகன் விக்ரமாதித்ய சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனது மகனுக்கு தொகுதி மக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்'' என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் மண்டி தொகுதியில் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த தொகுதிக்கு கடைசி கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் விக்ரமாதித்ய சிங்கின் பெயர் காங்கிரஸ் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த தொகுதியில் விக்ரமாதித்ய சிங்கின் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக உள்ளது. இங்கு 3 இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 20 முறை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விக்ரமாதித்ய சிங்கின் தந்தை வீரபத்ரசிங் 3 முறை எம்பியாகவும், வீரபத்ரசிங்கின் மனைவியும், விக்ரமாதித்ய சிங்கின் தாய் பிரதீபா சிங் 3 முறை எம்பியாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications