என்னது.. கோவாவில் பாஜக ஆட்சியமைக்க முடியாதா.. என்ன இப்படி சொல்றாரே திகம்பர் காமத்
பனாஜி: ‛கோவாவில் பாஜகவை அல்லாத ஆட்சி அமைக்க அனைத்து வழிகளையும் பரிசீலனை செய்து வருகிறோம்' என அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் கூறினார்.
கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 332 வேட்பாளர்கள் களத்தில் நின்ற நிலையில் மொத்தம் 79.61 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இந்த ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பெரும்பான்மை இல்லை
இந்த தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 11 இடங்களிலும், சயேச்சைகள் 3 இடங்களிலும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி,ஆம் ஆத்மி தலா 2 இடங்களிலும் வென்றது. ஆர்ஜிபி, ஜிஎப்பி தலா ஒரு இடங்களிலும் வாகை சூடியது. கோவாவில் ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இதனால் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 2 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

வழி குறித்து ஆலோசனை
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திகம்பர் காமத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். பாஜக ஆட்சியமைக்க காலம் தாழ்த்துகிறதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‛‛தேர்தல் முடிவு வெளியாகி இவ்வளவு நாள் ஆகியும் பாஜக இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு பிரச்சனை இருப்பது தெரிகிறது. கோவாவில் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான அனைத்து வழிகள் குறித்தும் காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது. இப்படி செய்வது தான் சட்டசபை தேர்தல் தொடர்பான மக்கள் தீர்ப்பை நிலைநிறுத்தும். ஏனென்றால் தேர்தலில் பாஜக 33.31 சதவீத ஓட்டுக்களை மட்டும் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் 66.69 சதவீதம் பேர் பாஜகவை விரும்பவில்லை என்பது தெரிகிறது.

புத்திசாலித்தனமாக...
மேலும் சில எம்எல்ஏக்களும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் கோவா மக்களுக்கு பாஜக அல்லாத ஆட்சியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பாஜகவுக்கு அதிகரிப்பு
இதன் தொடர்ச்சியாக பாஜகவின் எம்எல்ஏக்கள் சுபாஷ் பால்தேசாய், கோவிந்த் காட், தாஜி சால்கார் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ‛‛பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 அல்லது 5 நாளில் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவுக்கான ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு குறைந்துள்ளது'' என்றனர்.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications