ரூபாய் நோட்டு பற்றிய மத்திய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவார்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன், இதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

congress party opposed centres introduce of rs500, rs1000 notes

மோடியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.யும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பிரதீப் பட்டாச்சார்யா, பிரதமரின் முடிவு தன்னிச்சையானது, ஏழைகளுக்கு விரோதமானது. இது, சிறு வணிகர்களையும், நடுத்தர மற்றும் ஏழை மக்களையும் பாதிக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+