பெட்ரோல் விலை உயர்வு என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம்.. பிரக்யா கருத்து.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
போபால்: பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை, இதை பற்றி காங்கிரஸ் கட்சிதான் பொய் பிரச்சாரம் செய்கிறது என்று எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். நடக்க முடியாமல் இருக்கிறேன் என்று கூறி வீல் சேரில் வலம் வரும் இவர், உடல்நிலையை காரணம் காட்டி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு பெற்று வருகிறார்.
ஆனால் சமீபத்தில் இவர் திருமண விழா ஒன்றில் சந்தோசமாக குதித்து குதித்து ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடக்க முடியாது என்று கூறியவர் நடனம் ஆடியது சர்ச்சையானது.

பேச்சு
இந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பிரக்யா மீண்டும் வைரலாகி உள்ளார். போபாலில் கூட்டம் ஒன்றில் பேசிய பிரக்யா தாக்கூர், பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. விலை இன்னும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. காங்கிரஸ்தான் இதில் பொய்யான பிரச்சாரம் செய்கிறது என்று பிரக்யா தாக்கூர் குறிப்பிட்டு இருந்தார்.

வைரல்
இவரின் இந்த கருத்து இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. என்ன பெட்ரோல், டீசல் விலை உயரவில்லையா? என்ன மேடம் காமெடி பண்றீங்களா என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். நல்லவேளை பெட்ரோல் விலை பற்றி பேசுபவர்களை ஆப்கானிஸ்தான் போ என்று பிரக்யா தாகூர் சொல்லாதது ஆச்சர்யம்தான் என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

கிண்டல்
பெட்ரோலுக்கு பதில் எல்லோரும் கோமியத்தை பயன்படுத்துங்க என்று சொல்லாமல் நல்லவேளை இதை காங்கிரஸ் பொய் பிரச்சாரம் என்ற பிரக்யா குறிப்பிட்டார் என்று இன்னொரு நெட்டிசன் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

கணக்கு வீக்கா?
இன்னொரு நெட்டிசன், நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இல்லை. என்னை பொறுத்தவரை 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்பது முன்பு இருந் 70 ரூபாயை விட அதிகம்தான். ஆனால் பிரக்யா விலை ஏற்றம் என்பதை பொய் பிரச்சாரம் என்று சொல்கிறார்.. அப்ப நான்தான் கணக்கில் வீக்கா? என்று கிண்டலாக கேட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications