காங்கிரஸைப் பலப்படுத்த லீவ் முடிந்து வந்ததும் ராகுல் காந்தி மீண்டும் ”பாதயாத்திரை”!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தி விரைவில் பாதயாத்திரையத் தொடங்கப்போவதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் லீவில் உள்ளார். அவர், வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் நில மசோதாவுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து பிரியங்காவும், ராகுல் ஆதரவாளர்கள் இணைந்தும் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், "இத்திட்டத்தை எப்போது செயல்படுத்துவது என்பது குறித்து ராகுல் முடிவு செய்வார்.
இந்த திட்டப்படி, உத்தரபிரதேச மாநிலம் சாரநாத் நகரத்திலிருந்து பீகார் மாநிலம் சாம்ப்ரான் வரை, சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் ராகுல் பாதயாத்திரையாக செல்வார்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications