'பரம்பரை வரி’ கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை காங்கிரஸ் பறிக்க முயற்சிக்கிறது.. விடாத பிரதமர் மோடி
ராய்பூர்: முன்னோர்கள் வழியாக கிடைத்த சொத்துக்களுக்கு பரம்பரை வரியையும் நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
லோக்சபா தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் 82 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

2 ஆம் கட்ட தேர்தலுக்கன அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பொதுமக்களின் சொத்துகளையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தேர்தல் களத்தில் மாறியிருக்கிறது.
மோடியின் பேச்சு வெறுப்பூட்டும் விதமாக இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தன. எனினும், பிரதமர் மோடி சரமாரியாக காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், இன்று சத்தீஷ்கரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி 'பரம்பரை வரி' விதிப்போம் என்று சொல்கிறது என பேசினார்.
பிரதமர் மோடி கூறியதாவது:- பரம்பரை வரியையும் நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இளவரசர் மற்றும் ராயல் ஃபேமிலியின் ஆலோசகர் (சாம் பிட்ரோடோ) முன்பு ஒருமுறை கூறும் போது நடுத்தர மக்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்றார். பரம்பரை வரி விதிப்போம் என்று காங்கிரஸ் சொல்கிறது.
பெற்றோர்கள் மூலம் வரும் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ். கடினமாக உழைத்து நீங்கள் சம்பாதித்து இருக்கும் செல்வம் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்காது. மாறாக காங்கிரஸ் கட்சி உங்களிடம் இருந்து அவற்றை பறித்துவிடும்.
நீங்கள் வாழும் வரை உங்கள் மீது அதிகப்படியான வரிகளை விதித்துவிட்டு, உயிரிழந்த பிறகு, அந்த பரம்பரை வரி என்ற சுமையையும் உங்கள் மீது விதிப்பார்கள். மொத்த காங்கிரஸ் கட்சியும் நமது முன்னோர்கள் சொத்து என்று கருதி, தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்தவர்கள்தான், இந்திய மக்கள் தங்கள் சொத்துக்களை தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதை விரும்பவில்லை" என்று பேசினார்.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications