டிக்கெட் மறுத்த தலைமை: தற்கொலை செய்த காங்கிரஸ் தலைவர்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத விரக்தியில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் அகர் என்ற இடத்தை சேர்ந்தவர் நரசிங் மால்வியா. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார். ஆனால் இதுவரை தேர்தலில் எதுவும் போட்டியிட்டதில்லை.

இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பிய அவர், டிக்கெட் கேட்டு கட்சி மேலிடத்தில் விண்ணப்பித்தார். இந்த முறை தமக்கு நிச்சயம் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவர் போட்டியிட விரும்பி கேட்டு விண்ணப்பித்த அகர் தொகுதிக்கு, மது கெலாட் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த நரசிங் மால்வியா, தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் மத்தியப்பிரதேச காங்கிரஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+