தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை
டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கை நாளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள 5 நீதிபதிகளான சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் விசாரிக்கவில்லை. மாறாக 6வது இடத்தில் உள்ள நீதிபதி சிக்ரி, அவருக்கு அடுத்த நிலைகளில் உள்ள எஸ்.ஏ. பாப்டே, என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர்தான் விசாரிக்கவுள்ளனர்.

சீனியர் நீதிபதிகளைத் தவிர்த்து விட்டு ஜூனியர் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகுல், குரியன் ஜோசப் ஆகியோர், தலைமை நீதிபதிக்கு எதிராக பரபரப்பு புகார்களை அடுக்கி குற்றம் சாட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ராஜ்யசபாவில் இம்பீச்மென்ட் (தகுதி நீக்க) நோட்டீஸை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அதை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பிக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குதான் நாளை விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரி சலமேஸ்வர் தலைமையிலான பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்தார். முதலில் இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை வருமாறு கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் நாளை இந்த வழக்கை நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications