நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்... மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு!
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 1300 பக்தர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

104 இந்தியர்கள் மீட்பு
யாத்திரை சென்ற பக்தர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். நேபாளத்தில் சிக்கித் தவித்த இந்திய யாத்ரீகர்களில் முதல் கட்டமாக 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழர் ஒருவரும் பலி
கடுங்குளிர் தாளாமல் ஏற்கெனவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசந்திரன் உயிரிழந்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு
இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் குறித்து தகவல் தர டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

உதவி உண்கள் அறிவிப்பு
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தகவல் அளிக்க 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர் பாண்டியன் 9868560077, கண்ணதாசன் முத்துபாட்ஷா 9968219303 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விரைவு
ராணி மற்றும் பவித்ரா 011-21610285 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள நேபாளத் தூதரகத்தை தொடர்புகொண்டு தமிழர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழர்களை மீட்க இரண்டு அதிகாரிகள் நேபாளம் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications