குஜராத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு- தமிழகம் 5-வது இடம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இதுவரை குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனவால் பாதிப்பும் மரணங்களும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து டெல்லியிலும் மத்திய பிரதேசத்திலும் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன.

Coronavirus Cases: Total death toll 58 in Gujarat

4-வது இடத்தில் தமிழகம் இருந்து வந்தது. தற்போது குஜராத்தில் மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1604 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் குஜராத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்- தற்போதைய நிலவரம்:

  • மகாராஷ்டிரா - 3651
  • டெல்லி- 1893
  • குஜராத் - 1604
  • மத்திய பிரதேசம்- 1407
  • தமிழ்நாடு-1372
  • ராஜஸ்தான் -1351
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+