குஜராத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு- தமிழகம் 5-வது இடம்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இதுவரை குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனவால் பாதிப்பும் மரணங்களும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து டெல்லியிலும் மத்திய பிரதேசத்திலும் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன.

4-வது இடத்தில் தமிழகம் இருந்து வந்தது. தற்போது குஜராத்தில் மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1604 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் குஜராத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்- தற்போதைய நிலவரம்:
- மகாராஷ்டிரா - 3651
- டெல்லி- 1893
- குஜராத் - 1604
- மத்திய பிரதேசம்- 1407
- தமிழ்நாடு-1372
- ராஜஸ்தான் -1351












Click it and Unblock the Notifications