வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. இந்தியாவில் கொரோனாவால் பலி 9 ஆனது
கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா: கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இமாச்சல் பிரதேசத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ்.. இந்தியாவில் இந்த மோசமான வைரஸ் இப்போதுதான் வேகம் எடுத்துள்ளது. 424 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை 24 பேர் கொரோனா வைரஸ் தாக்கி குணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகமாக 89 பேரும் கேரளாவில் அதிகமாக 67 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா மரணம்
கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட இவர் கொல்கத்தாவில் தம் தம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரம் முன் 55 வயது நிரம்பிய இவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொல்கத்தாவில் கொரோனா பாதித்த இரண்டாவது நபர், இவர்தான். இவருக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாரடைப்பு ஏற்பட்ட நபர்
ஆனால் இவருக்கு ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ஒரு முறை மாரடைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு சிகிச்சை அளிப்பதில் கொஞ்சம் சிரமம் காணப்பட்டது. இவர் மூச்சு விடுவதிலும் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. கொரோனா வைரஸ் வந்தால் இதயம் அடைக்கும், மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று இவருக்கு உடல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது.

மீண்டும் மாரடைப்பு வந்தது
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு இன்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக திடீர் என்று மூச்சடைப்பு ஏற்பட்ட இவர் மாரடைப்பால் துடித்து போனார். ஆனால் இவருக்கு கொடுக்கப்பட்ட அவசர சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் இவர் பலியானார். இதனால் கொரோனாவால் முதல் நபர் மேற்கு வங்கத்தில் பலியாகி உள்ளார்.

அடுத்த பலி
அதேபோல் கொரோனவால் இமாச்சல் பிரதேசத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் 69வயது திபெத் நபர் கொரோனாவால் பலியாகி உள்ளார். இவர் மார்ச் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை இவர் பலியானார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை
இன்று காலை மும்பையில் வசித்து வந்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபர் பலியானார். கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முதல் நாள் குணமாகி வீட்டிற்கு திரும்பினார். ஆனால் வீட்டிற்கு திரும்பி ஒரே நாளில் மூச்சு விட முடியாமல் அவர் பலியானார். அவரையும் சேர்த்தால் இந்தியாவில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications