திரிபுரா: மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா- பாதிப்பு 88 ஆக அதிகரிப்பு
அகர்தலா: திரிபுராவில் மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திரிபுராவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.
திரிபுராவில் 138-வது பட்டாலியனைச் சேர்ந்த பி.எஸ்.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதலில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது 86-வது பட்டாலியன் வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

அஸ்ஸாம்- அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் அம்பாசாவில் இந்த 86-வது பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து கொரோனா தொற்று பரவியது. தற்போது 2 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 86 பேர் திரிபுராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள்தான் கொரோனாவால் மிக குறைவான அளவு பாதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் திரிபுராவில் திடீரென கொரோன பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
ஏற்கனவே சி.பி.ஆர்.பி.எப். வீரர்கள் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications