திரிபுரா: மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா- பாதிப்பு 88 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுராவில் மற்றொரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாமிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திரிபுராவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

திரிபுராவில் 138-வது பட்டாலியனைச் சேர்ந்த பி.எஸ்.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதலில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது 86-வது பட்டாலியன் வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

Coronavirus hits another BSF battalion in Tripura- cases rise to 88

அஸ்ஸாம்- அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் அம்பாசாவில் இந்த 86-வது பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து கொரோனா தொற்று பரவியது. தற்போது 2 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 86 பேர் திரிபுராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள்தான் கொரோனாவால் மிக குறைவான அளவு பாதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் திரிபுராவில் திடீரென கொரோன பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

ஏற்கனவே சி.பி.ஆர்.பி.எப். வீரர்கள் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+