லாக்டவுனுக்கு எதிர்ப்பு- குஜராத்தின் சூரத் வீதிகளில் போராட்டம் நடத்திய பிற மாநில தொழிலாளர்கள்
சூரத்: கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தின் சூரத் நகரில் நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தப்பட்ட போது பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கால அவகாசம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பிற மாநிலங்களில் பெரும் துயரை சந்திக்க நேரிட்டது.

இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து பல நூறு, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே இந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கனோர் புறப்பட்டனர். இதனால் நிலைகுலைந்த மாநில அரசுகள், பிற மாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களில் தங்க வைத்து சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தன.
ஆனால் மத்திய அரசு இதுபற்றி எதுவுமே கவலைப்படவில்லை. டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கால்நடையாக வெளியேறிய போதும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அகதிகளாக தவிக்கும் பிற மாநில தொழிலாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மும்பை பாந்தராவில் ஒன்று திரண்ட பிற மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் இவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

அதேபோல் குஜராத்தின் சூரத் நகரிலும் பிற மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதனால் சூரத் நகரில் பெரும் பதற்றம் நிலவியது. ஏற்கனவே சூரத் நகரில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications