கொரோனா.. வேலை இழந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் ஒடிசா அரசு.. ரூ.100 கோடி ஒதுக்கிய நவீன் பட்நாயக்!
கொரோனா காரணமாக வேலை இழந்த ஏழ்மையான நகர மக்கள் பயன்பெறும் வகையில் ஒடிசா மாநில அரசு நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.
புவனேஷ்வர்: கொரோனா காரணமாக வேலை இழந்த ஏழ்மையான நகர மக்கள் பயன்பெறும் வகையில் ஒடிசா மாநில அரசு நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.
ஒடிசாவில் மொத்தம் 60 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஒடிசாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அங்கு 21 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரே ஒருவர்தான் அங்கு பலியாகி உள்ளார். மீதம் இருக்கும் 38 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக வேலை இழந்த ஏழ்மையான நகர மக்கள் பயன்பெறும் வகையில் ஒடிசா மாநில அரசு நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் ஒடிசாவில் 144 நகரங்களில் உள்ள மக்கள் வேலை பெறுவார்கள். அதேபோல் இவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தப்படும்.
முக்கியமாக வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இந்த உதவி செய்யப்படும். மிஷன் சக்தி குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாத மாதம் பயனாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
நகர ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த திட்டம் மிக துரிதமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தினக்கூலிகள், ஏழ்மையான மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் மூலம் தண்ணீர் பாசன பகுதிகள் தூர் வாரப்படும், பார்க்குகள் மேம்படுத்தப்படும், விளையாட்டு அரங்குகள் சரி செய்யப்படும், மரங்கள் நடப்படும், பொது கழிப்பிடங்கள் உருவாக்கப்படும், சுத்தம் செய்யப்படும்.
Recommended Video
இந்த பணிகள் வேலையின்றி இருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படும். சரியான சமூக இடைவெளியை கடைப்பிடித்து இந்த பணிகள் கடைபிடிக்கப்படும்.












Click it and Unblock the Notifications