டெல்லியில் கெஜ்ரிவால் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன...: காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நாட்கள் எண்ணப் படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பிரதேசத்தின் போலீஸ் நிர்வாக அதிகாரத்தை டெல்லி அரசிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் 10 நாள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லியே முடங்கும் அபாயத்தில் உள்ளது. முதல்வர் ஒருவரே இவ்வாடு போராடுவது இது தான் முதல் முறை எனக் கூறப் படுகிறது.

'Countdown' has begun for AAP, may withdraw support: Congress

இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மீம் அப்சல், ‘டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நாட்கள் எண்ணப் படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-

கெஜ்ரிவால் தொடங்கியுள்ள நடவடிக்கைகளின் படி அவரது அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒரு அரசு தலைமைச்செயலகத்தில் இருந்து இயங்குகின்றது. அது தெருக்களில் இருந்து இயங்கவில்லை.

அரசின் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் நின்று போராடும் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலத்தை ஆளுகிறபோது நீங்கள் எதிர்கட்சிகளை போன்று செயல்பட முடியாது' என்றார்.

மேலும், கெஜ்ரிவாலும் அவரது ஆட்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தால், ஆம் ஆத்மி கட்சிக்கான ஆதரவு குறித்து காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+