நடுவானில் பறந்து கொண்டே திருமணம் செய்து கொண்ட ஆச்சர்ய தம்பதி !

Subscribe to Oneindia Tamil

கோலாப்பூர்: மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த மலையேற்ற வீரர் 600 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கிய படியே திருமணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

பொதுவாக திருமணங்கள் மண்டபகங்கள், உணவு விடுதிகள் மற்றும் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதிலும் புதுமை செய்ய விரும்புவர்கள் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் திருமணம் செய்துள்ளனர். தற்போது அதையும் தாண்டி புதுவிதமாக மலையேற்ற வீர்ர் நடுவானில் பறந்துகொண்டே திருமணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

couple gets married over 600 ft deep valley

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஜெய்தீப் ஜாதவ். இவருக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் ரேஷ்மா பாட்டீலுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. தன் திருமணத்தை மலையேற்ற விளையாட்டு குறித்த ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பொதுமக்கள் மத்தியில் நடத்த ஜெய்தீப் திட்டமிட்டார். அதற்கு, ரேஷ்மாவும் ஒப்புக் கொண்டார்.

couple gets married over 600 ft deep valley

இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள விஷாலகாதா மற்றும் பன்ஹாலா சிகரங்களை இணைக்கும் வகையில் 600 அடி உயரத்தில் உறுதியான பிளாஸ்டிக் கயிறுகள் கட்டப்பட்டன. பின்னர் தம்பதிகள் இருவரும் பாரம்பரிய மகாராஷ்டிர உடைகளை அணிந்து கொண்டு, கயிற்றில் தொங்கியபடி ஜெய்தீப்பும், ரேஷ்மாவும் கயிற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.

மற்றொரு கயிற்றில் தொங்கியபடி, திருமண மந்திரங்களை புரோகிதர் ஓத, ரேஷ்மா கழுத்தில் ஜெய்தீப் தாலிகட்டினார். இந்த திருமணம் மொத்தம் 40 நிமிடங்கள் நடு வானில் நடைபெற்றதுதான் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மேலும் இந்தத் திருமணத்தை சுமார் 1,200 மக்கள் கண்டுகளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+