பெங்களூர் மத்திய சிறைக்கே ஷிப்ட் ஆகிறது கோர்ட்.. சசிகலாவுக்காக
பாதுகாப்பு கருதி சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதால் பெங்களூருவில் சசிகலா ஆஜராகவுள்ள நீதிமன்ற அறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை காரில் புறப்பட்டார்.

மாலை 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார்.

கூடுதல் நகர உரிமையியல் அமர்வு முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானதும், அவர்கள் மூவரும் தெற்கு பெங்களூரிலுள்ள (ஒசூர் ரோடு அருகே) பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவர்.

இந்நிலையில், சசிகலா ஆஜராக உள்ள நீதிமன்ற அறை பெங்களூரு மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு கருதி சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதால் பெங்களூருவில் சசிகலா ஆஜராகவுள்ள நீதிமன்ற அறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications