பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: இது உத்தரகாண்ட் முதல்வர்
ஹரித்துவார்: பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது என்று, உத்தரகாண்ட் மாநில முதல்வர் (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹரிஷ் ராவத் உள்ளார்.

இந்துக்களின் புனித நகரத்தில் ஒன்றான, ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, ஹரிஷ் ராவத் இவ்வாறு கூறியுள்ளார். ராவத் கூறியதாவது: பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது
உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதையும் செய்ய தயார்.
பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை நான் தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவனமும் வழங்கிவருகிறது. இவ்வாறு ராவத் பேசியுள்ளார்.
பசுவதைக்கு எதிராக பேசும் பாஜக அமைச்சர்கள், எம்.பிக்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மாநில முதல்வரே இவ்வாறு பேசியுள்ளது அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications