மே.வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசோடு கூட்டணியா? மா.கம்யூ பொலிட்பீரோ இன்று கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம்மிக்க பொலிட்பீரோ குழு இன்று டெல்லியில் கூடுகிறது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், காங்கிரசோடு இணைந்து கூட்டணி வைப்பது குறித்து முக்கிய முடிவு இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவை சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களான, பாலகிருஷ்ணன், பினராயி விஜயன் போன்றோர், காங்கிரசோடு கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பல உறுப்பினர்கள் கூட்டணியை விரும்புகிறார்கள்.

CPM Politburo meeting today: Will party go for alliance with Congress in Bengal?

இதில், முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கருத்து முக்கியத்துவம் பெறும். ஏனெனில், அவர் பதவிக்காலத்தில்தான், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவை வாபஸ் பெற்றது.

வயது முதிர்வு காரணமாக, முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா டெல்லி வரமுடியாது என்பதால், அவர் தனது கருத்தை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வாய்ப்புள்ளது. மம்தா கட்சியை எதிர்க்க காங்கிரசோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பதே பாதுகாப்பானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் முக்கிய தலைவர்கள் நினைப்பதே இந்த கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு காரணம்.

மேற்கு வங்கத்திற்கும் இவ்வாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+