விலங்குகளுக்காக கூண்டுக்குள் போன கிரிக்கெட் வீரர் ஓஜா
ஹைதராபாத்: விலங்கியல் பூங்காக்களில் கூண்டுகளில் விலங்குகளை அடைத்து வைக்கும் கொடுமையை எதிர்த்து பீட்டா அமைப்புக்காக கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா பிரச்சாரம் செய்துள்ளார்.
விலங்குகள் கொல்லப்படுவது, கூண்டுகளில் அடைத்து வைக்கப்படுவதற்கு எதிராக பீட்டா அமைப்பு பிரபலங்களை கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் பீட்டாவுக்காக பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா.
விலங்கியல் பூங்கா
சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய விலங்குகள் விலங்கியல் பூங்காக்களில் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார் ஓஜா.
கூண்டு
விலங்குகள் படும் அவதியை மக்களுக்கு எடுத்துரைக்க ஓஜா கூண்டுக்குள் அமர்ந்து விலங்குகளை சுதந்திரமாக சுற்ற விடுங்கள் என்கிறார்.
பிளக்கார்டு
கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஓஜா விலங்குகளின் நிலையை எண்ணிப் பாருங்கள், விலங்கியல் பூங்காக்கள் வேண்டாம் என்று கூறுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிளக்கார்டை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
ஃபுல் டிரஸ்
வழக்கமாக பீட்டா விளம்பரங்களில் வருவோர் அரைகுறை ஆடை அல்லது நிர்வாண கோலத்தில் வருவார்கள். இந்நிலையில் ஓஜா ஃபுல் டிரஸ்ஸில் போஸ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.