பெங்களூருவில் 3 நாட்களாக நீடித்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்- 144 தடை நீடிப்பு!!
பெங்களூரு: கன்னட அமைப்புகளின் உச்சகட்ட வன்முறையைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களாக 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு நீடிக்கிறது.
பெங்களூரு நகரே நேற்று முன்தினம் போர்க்களமானது.. ஒரே நாளி 100-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் கூண்டோடு எரிக்கப்பட்டன.

கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தமான 52 பேருந்துகள் மொத்தமாக எரிக்கப்பட்ட காட்சி ஒரு ஊரே பற்றி எரிவதை வெளிப்படுத்தியிருந்தது.. தமிழக பதிவெண் கொண்ட வாகனம் எதுவானாலும் அதை தீக்கிரையாக்குவதையே கன்னட அமைப்பினர் குறிக்கோளாக வைத்திருந்தனர்..
இதனால் பெங்களூரு நகரில் முதலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

1991-ம் ஆண்டு காவிரி பிரச்சனைக்கான வன்முறையின் போது பெங்களூரு நகரம் எப்படி இருந்ததோ அதுபோல நேற்று பெங்களூரு நகரம் வெறிச்சோடியது.. இருப்பினும் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது சிறிது நேரம் தளர்த்தப்பட்டது.
இன்று 3-வது நாளாகவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்தது. ஆனால் நிலைமை கட்டுக்குள் வந்ததால் காலை 9 மணிக்கு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
#Curfew has been lifted in all 16 police station limits of Bengaluru City from 9AM today(14-09-2016) pic.twitter.com/eNlCCNPmSW
— BengaluruCityPolice (@BlrCityPolice) September 14, 2016
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications