ஸ்ரீநகரின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து.. மக்கள் நிம்மதி பெருமூச்சு...
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த கலவரத்தையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்றிலிருந்து கலவர நிலைமை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜுலை 8ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சுமார் 68 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கலவர நிலைமை சற்று ஓய்ந்து நிலைமை சீரடைந்து வருவதால் ஸ்ரீ நகரின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக, ஸ்ரீநகருக்கு உட்பட்ட சில பகுதிகளில் நேற்று 8 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையடுத்து இன்று முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தங்களின் தேவைக்கு ஏற்ப சாலையில் நடந்து போவதும் வருவதுமாக உள்ளனர். மேலும், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சாலைகளில் இயக்கப்படுகின்றன.
எனினும், கடைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications