இடஒதுக்கீடு கோரி இன்று குஜராத் பந்த்- பல இடங்களில் வன்முறை- அமைதி காக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்!
அகமதாபாத்: குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி.) சேர்த்து இடஒதுகீட்டு வழங்கக் கோரி இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. இத்தகைய வன்முறைகளை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் 12% பேர் உள்ளனர். பொதுவாக படேல் சமூகத்தில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள். அரசியலிலும் அவர்களது ஆதிக்கம் உள்ளது.

குஜராத் மாநிலத்தின் பல முதல்வர்கள் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். தற்போதைய முதல்வர் ஆனந்திபென்னும் படேல் சமூகத்தவரே.
குஜராத்தில் பாரதிய ஜனதாவின் கிஷான் சங் அமைப்பானது வலிமையான பிரிவாக கருதப்படுகிறது. இது முழுவதும் படேல் சமூகத்தினரைக் கொண்ட அமைப்பு.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக திடீரென படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான பேரணி, போராட்டங்களை ஹர்தீக் படேல் தலைமையில் நடத்தி வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக அகமதாபாத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தையும் ஹர்திக் படேல் நேற்று நடத்திக் காட்டினார். இந்த பொதுக்கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுவை வாங்குவதற்கு முதலமைச்சர் ஆனந்திபென் படேல் வரும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஹர்திக் அறிவித்தார்.
ஆனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஹர்திக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து படேல் சமூகத்தினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அம்மாநில உள்துறை அமைச்சரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி குஜராத் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு படேல் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ராஜ்கோட், சூரத், மேஷானா, போர்பந்தர் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரிலும் பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் அரசுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பல இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளன.
பிரதமர் மோடி வேண்டுகோள்
இதனிடையே குஜராத்தில் நடைபெறும் வன்முறைகளைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறையால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications