Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பந்தாடும் பைபர்ஜாய் புயல்.. குஜராத்தை உற்று நோக்கும் மோடி! முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்து வரும் நிலையில், கடலோர பகுதிகளின் நிலை குறித்து மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேலிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

கடந்த வாரம் அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் கேரளாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த புயல் அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை கடந்து குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் நிலை கொண்டது.

 Cyclone Biparjoy - PM Narendra Modi asks Gujarat CM about coastal areas

இந்த புயல் பாகிஸ்தானில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது குஜராத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் கரையை கடந்து வருகிறது. இரவு 9 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் கடக்க தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக குஜராத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பாகிஸ்தானின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புயல் கரையை கடக்கும் முன் துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

 Cyclone Biparjoy - PM Narendra Modi asks Gujarat CM about coastal areas

பெரும்பாலான இடங்களில் விடாமல் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இரவு மணிக்கு புயலின் வெளித்தோற்றம் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை தொட்டது. இந்த வேகம் 115 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் படிப்படியாக அதிகரித்தது.

 Cyclone Biparjoy - PM Narendra Modi asks Gujarat CM about coastal areas

குஜராத்தின் நாலியா, மண்ட்வி, துவாரகா, சலாயா, ஜாம்நகர் உள்ளிட்ட கடலோர பகுதிகளை புயலின் கண் பகுதி தொட்டு உள்ளது. காற்றின் வேகமும் தற்போது மணிக்கு 125 கிலோ மீட்டரை தாண்டி வீசி வருவதால் பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்து வரும் புயலை பிரதமர் நரேந்திர மோடி உன்னிப்பாக கடந்து வந்துள்ளார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உயர்மட்ட குழுவை கூட்டு ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் கடலோர பகுதிகள் குறித்து கேட்டறிந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+