ஹூட்ஹூட்: ஒடிஸாவில் கர்ப்பணிகளை காப்பாற்றியவர் நிமோனியாவுக்கு பலி
புவனேஸ்வர்: ஒடிஸாவில் ஹூட்ஹூட் புயல் தாக்கும் முன்பு கர்ப்பிணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல உதவியவர் நிமோனியாவால் மரணம் அடைந்தார்.
வங்கக் கடலில் நிலை கொண்ட ஹூட்ஹூட் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸாவின் கோபால்பூர் இடையே ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தபோதிலும் மழை மட்டும் நிற்காமல் பெய்து வருகிறது.
இந்நிலையில் புயல் தாக்கும் முன்பு ஒடிஸாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள சத்பயா பகுதியில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு படகில் அழைத்துச் சென்றனர். படகு முதலைகள் அதிகம் உள்ள சிற்றாறில் சென்றபோது கவிழ்ந்தது. இதை பார்த்த சகாதேவ் சமால்(40) என்பவர் ஆற்றில் குதித்து கர்ப்பணிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றினார்.
இந்நிலையில் தொடர்ந்து மழையில் நனைந்து ஆற்றில் நீந்திய அவர் நிமோனியாவால் இன்று பலியானார். சகாதேவ் இறந்தது ஓகிலோபாலா மற்றும் சத்பயா கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படகு கவிழ்ந்ததில் 8 வயது சிறுமி பலியானார். மேலும் 11 வயது சிறுமி மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications