பாய்லின் புயலால் ஒடிஷா, ஆந்திராவில் கனமழை! சுமார் 5 லட்சம் பேர் வெளியேற்றம்!
புவனேஸ்வர்: பாய்லின் புயலால் ஒடிஷா, ஆந்திராவில் கனமழை கொட்டியது. கொட்டும் மழையினிடையே இரு மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாய்லின் கரையைக் கடக்கும் முன்பாகவே இரு மாநிலங்களிலும் கனமழை கொட்டியது. பலமான காற்று வீசுவதால் பல இடங்களில் துர்கா பூஜை பந்தல்கள் பறந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது

இந்த புயல் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அத்துடன் சுமார் ஒரு கோடிப் பேர் இந்த பாய்லின் புயலால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும் இதனால் அரசு நிர்வாகத்துடன் பொதுமக்கள் ஒத்துழைத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேரும் ஆந்திராவில் 80 ஆயிரம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கோபால்பூரில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அருகே உள்ள சத்ராபூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications