அரை மணி நேரம் லேட்.. கோப்புகளை பிரதமரிடம் கொடுத்து விட்டு.. கடகடவென கிளம்பி சென்ற மம்தா!
மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்பை பிரதமர் நேரில் ஆய்வு செய்கிறார்
கொல்கத்தா: புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கொல்கத்தா வந்திருந்த பிரதமருடன் ஆற அமர்ந்து ஆய்வில் பங்கேற்காமல் லேட்டாக வந்து கோப்புகளை பிரதமரிடம் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்று விட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி.
வங்க கடலில் உருவான யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கி.மீட்டருக்கே தெற்கே நேற்று முன்தினம் கரையை கடந்தது... இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
இந்த புயல் காரணமாக 4 பேர் பலியாகிவிட்டனர்.. ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. கிட்டத்தட்ட 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன... குறிப்பாக, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் போன்றவைகளின் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

ஒடிசா
இதுபோலவே, ஒடிசாவில் பாலசோர், பத்ராக் போன்ற மாவட்டங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.. இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பிரதமர்
மேற்கு வங்கத்தில் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிடப்பட்டது. புயலால் ஏற்பட்ட சேத விவரம் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதையடுத்து, இருவரும் மாநிலத்தில் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை தனித்தனியாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டன.

ஆய்வு
ஆனால், பிரதமரின் இந்த ஆய்வில், மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.. பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கி அரை மணி நேரத்திற்குப் பிறகு முதல்வர் மமதா உள்ளிட்டோர் அங்கு வந்தனர். பிரதமரிடம் புயல் பாதிப்பு தொடர்பான கோப்புகளை கொடுத்த முதல்வர், பல்வேறு மீட்டிங்குகள் இருப்பதால் தாங்கள் கிளம்புவதாக கூறி விட்டு போய் விட்டனர்.

ஆய்வுக்கூட்டம்
இதனால் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ திபெந்து அதிகாரியும் உடன் இருந்தார். முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஆய்வில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. சாகர் தீவில் இருந்து கலைகுண்டாவை அடைய எப்படியும் 45 நிமிஷங்கள் ஆகும்.. அதுமட்டுமில்லாமல், மாநிலத்தில் சூறாவளி காரணமாக ஏற்பட்ட இழப்பு குறித்த, அறிக்கையை தயார் செய்தும் வருகிறேன்.. இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் நான் ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த அறிக்கையையும் பிரதமரிடம் ஒப்படைத்தார் மம்தா.

மதிப்பீடு
முன்னதாக, யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, பிரதமர் மோடி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு சென்றார்.. அங்கு புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஒடிசாவில் யாஸ் புயாலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications