கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி கொலை செய்யப்படவில்லை?.. சிபிஐ அறிக்கை தயார்!
பெங்களூர்: கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரணத்தில் சதி ஏதும் இல்லை என்று சிபிஐ கண்டறிந்துள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இளம் ஐஏஎஸ் அதிகாரியான டி.கே.ரவி கடந்த மார்ச் மாதம் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேர்மையான அதிகாரி என்பதால், அவரால் பாதிக்கப்பட்ட மணல் அல்லது ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கொலை செய்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தினர். சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க கோரினர்.

கர்நாடக சிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து போராட்டங்கள் ஓய்ந்தன.
இந்நிலையில் ரவி உடல் ஏற்கனவே பெங்களூர் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அகில இந்திய மெடிக்கல் அசோசியேசன் மருத்துவர்களால் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனைகளில், ரவி தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டது.
ரவியின் தொலைபேசி உரையாடல்களை சிபிஐ சோதித்து பார்த்தபோதிலும், கொலைக்கான முகாந்திரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜூலை மாதம் சிபிஐ தனது விசாரணை அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications