Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித் மாணவர் தற்கொலை: ஸ்ம்ருதி இரானிக்கு எதிர்ப்பு- 10 தலித் பேராசிரியர்கள் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.சி./எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் 10 பேர் தங்களது நிர்வாகப் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஹைதரபாத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி, தத்தாத்ரேயா ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Dalit student Suicide: SC/ST teachers of Hyderabad Central University (HCU) resigned

இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்து இருந்த மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி, ''மாணவர் ரோகித் தற்கொலை தலித் மற்றும் தலித் அல்லாத மாணவர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் அல்ல என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் 10 பேர் தங்களது நிர்வாகப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து மாணவர் நலன் மற்றும் எஸ்.சி/ எஸ்.டி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அமைப்பின் டீன் பிரகாஷ் பாபு கூறுகையில், ''தேசத்தை மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி திசை திருப்புகிறார். இந்த நிர்வாகத்தின் கீழ் நாங்கள் பணியாற்ற மாட்டோம். பல்கலை நிர்வாகக் கவுன்சிலில் தலித் உறுப்பினர்கள் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் தலித் அமைப்பைச் சேர்ந்த 20 ஆசிரியர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு உதவ யாரும் இல்லை என்பதால் தற்போது 10 பேர் மட்டும் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாணவர்களை திரிணமுல் கட்சி சார்பில் தேரிக் ஒ' பிரைனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரியும் சந்தித்துப் பேசினர். இன்று மாணவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+