உ.பி அமைச்சர் மகள் கங்கையில் மூழ்கி பலி- உடலைத் தேடும் போலீஸார்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்திர பிரதேசத்தில் அமைச்சர் ஒருவரின் மகள் கங்கையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலாளர் நிலத்துறை அமைச்சராக இருப்பவர் ஷாகித் மன்சூர். இவரது மகள் அபிதா ஹசன்.

மீரட்டில் மருத்துவக் கல்லூரி படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து சக மாணவ, மாணவிகளுடன் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசுக்கு சுற்றுலா சென்றார்.

Daughter of UP minister drowns in Rishikesh

அங்கு கங்கை நதியை பார்க்கச் சென்றனர். அனைவரும் நதிக்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அபிதா ஹசன் ஆற்றில் தவறி விழுந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதைப்பார்த்து கரையில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவியின் உடல் சிக்கவில்லை. 3 நாட்களாகியும் கிடைக்காததால் மாணவி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+