ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: தாவூத், சோட்டா ஷகீல் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு
டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகிலை தேடப்படும் குற்றவாளிகளாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டீலா ஆகிய வீரர்கள், சூதாட்டத் தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே இந்த ஐபிஎல் சூதாட்டம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி சிறப்புப் போலீசார், ‘கடந்த 1993-ஆம் ஆண்டில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது' எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் ஆகியோரையும், இந்த வழக்கில் போலீஸாரால் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சந்தீப் சர்மாவையும் தேடப்படும் குற்றவாளிகளாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அறிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications