Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெனாசிர் பூட்டோ ரோட்டில் உள்ள வீட்டில் தாவூத்.. ஒளித்து வைத்துள்ள பாக்.. கண்டுபிடித்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இருக்கும் புதிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானில் உள்ள மர்ரீ ரோடு அதாவது பெனாசீர் பூட்டோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Dawood Ibrahim's new location found

தாவூத் கராச்சியில் இருப்பதை உளவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தாவூதை பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளதாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

தாவூதின் புதிய இடம்

ராவல்பின்டிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே இந்த மர்ரீ ரோடு வீடு உள்ளது. தாவூத் பணக்காரர்கள் இருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அரசு தாவூதை நாட்டை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்ய இது உகந்த நேரம் இல்லை. பாகிஸ்தான் அரசு தாவூதை கராச்சி மற்றும் மர்ரீ ரோட்டுக்கு இடையே உள்ள பகுதியில் அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் பினாமி பெயர்களிலும், போலியான பெயர்களிலும் உள்ள தாவூதின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு அவர் ஐஎஸ்ஐக்கு உதவ முடியாமல் போகும். தனது தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதால் ஐஎஸ்ஐ தாவூதின் பக்கம் உள்ளது. அவர் தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை தனது பாதுகாப்புக்காக அளிக்கிறார்.

தாவூதின் சொத்துக்களை முடக்கி, அவரது போதைப் பொருள் வியாபாரத்தை தடுத்து நிறுத்தினால் அவரின் வருமானம் பாதிக்கப்படும் என்று இந்தியா கருதுகிறது. இது தவிர தாவூதின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இன்டர்போலிடம் தெரிவிக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+