சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: சி.பி.ஐ. முன் தயாநிதி மாறன் நாளை ஆஜர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. முன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நாளை ஆஜராக உள்ளார்.

2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி. ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது.

Dayanidhi Maran to appear for CBI Questioning

இவ்வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்யவும் காவலில் வைத்து விசாரிக்கவும் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தயாநிதிமாறன் தப்பியுள்ளார்.

மேலும் சி.பி.ஐ. முன்பாக நாளை நவ.30-ந் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் நாளை முதல் 1 வார காலத்துக்கு தயாநிதி மாறன், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆஜராக உள்ளார். அவரிடம் மீண்டும் சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்த உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+